tamilnadu

img

திருச்செங்கோட்டில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்செங்கோடு, ஜன. 21- 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன் னிட்டு திருச்செங்கோடு  போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைகவசம் அணிந்து விழிப்பு ணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது.  இப்பேரணியை திருச்செங்கோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கொடி யசைத்து துவக்கி வைத்தார். மேலும், இதில் திருச் செங்கோடு வாகனபழுது நீக்குவோர் நலச்சங்க உறுப்பினர்கள் தலைகவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது திருச்செங் கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் துவங்கி பழைய பேருந்து  நிலையம், புதிய பேருந்து நிலையம், கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி  வழியாக வேலூர் சாலையில் நிறைவடைந்தது.  இதில், திருச் செங்கோடு நகரகாவல் ஆய்வாளர் தங்கவேல், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் ராஜேந்தி ரன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட திராளா னோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

;