tamilnadu

img

மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை

நாமக்கல், அக்.24- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் ஆசிரியர் காலனியில் உள்ள மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில் உள்ள ஆசிரியர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள மண் சாலையில் மழைக்காலங்களில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்லமுடியாத வகையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.  ஆகவே, இந்த  மண் சாலையை, தார்ச்சாலை அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்  ஆகியோரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.  தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், கொன்னை யார் ஊராட்சி நிர்வாகமும் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.