நாமக்கல், அக். 26- ராசிபுரம் நகராட்சியில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட் சியர் கா.மெகராஜ் தலைமையில் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி யில் 8 தொகுப்பு சாலைப் பணிகள் ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி கட்டடங்கள் கட்டும் பணி கள் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் ரூ.172 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளின், பணி முன்னேற்றம் குறித்தும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களிடம் கலந்து ரையாடினர். இந்த நிகழ்ச்சிகளில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், ராசிபு ரம் வட்டாட்சியர் பாஸ்கரன், ராசிபுரம் நக ராட்சி ஆணையர் அ.குணசீலன், பாதாள சாக்கடைத்திட்ட செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் சிவ குரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.