tamilnadu

கொரோனாவை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல், அக். 11-  நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக வும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கி ணைந்து கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனாவி னால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்ட 86 இறப்புகளில், 79 இறப்பு கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளன.

கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை ஆய்வு செய்ததில் காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், ஆரம்ப நிலையில் அலட்சியமாக இருப்ப தாலே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருப்பதால், வீட் டில் உள்ள அனைவருக்கும் தொற்று பரவி முழு குடும்பமும் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. முக்கியமாக குடும் பத்தில் உள்ள முதியவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது. எனவே, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வயிற்று போக்கு, வாந்தி, தலை சுற்றல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடன டியாக அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவம னையினை அணுக வேண்டும். கொரோனா பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் என வந்து விடுமோ என்றும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டி யிருக்குமோ என்றும் அச்சம் கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சையை தவிர்ப்பது நோய் முற்றுவதற்கு வழிவகுத்தி டும் என்பதால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவம னையை அணுகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள் ளார்.