tamilnadu

img

கொரோனோ வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

நாமக்கல், பிப். 10- கொரோனோ வைரஸ் நோய் தொற்றால் நாமக்கல் மாவட்டத் தில் யாரும் பாதிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் திங்களன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மொத் தம் 376 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி னர். அம்மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை மேற் கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென துறை சார்ந்த அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக கொரோனோ வைரஸ் விழிப்பு ணர்வு மற்றும் கைகழுவும் முறை கள் பற்றி விரிவாக செயல் விளக் கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாவது, சமீபத்தில் சீனாவில் ஏற் பட்டுள்ள கொரோனோ வைரஸ் நோய் தொற்றால் மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. எனி னும், முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சீனாவிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் பயணி கள் அனைவரும் விமான நிலை யங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் குறித்த விவரங்கள் சுகா தாரத் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டு, அதனடிப்படையில் அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து அரசு மருத் துவமனைகளிலும் தொற்று நோய் களுக்கான சிறப்பு வார்டுகள் ஏற்ப டுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  இக்குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ் குமார், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் என்.எஸ். பாலசுப்பிரமணியம், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) எஸ்.சோமசுந்தரம் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.