tamilnadu

img

நாமக்கல்: தடுப்பணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

நாமக்கல், நவ.11- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டம், ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து  பாசனத்திற்காக தண்ணீரை, மின்சாரம் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டம், ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங் கமணி புதனன்று தண்ணீரை திறந்து வைத் தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச் சர் பி.தங்கமணி கூறுகையில், இந்த ஜேடர் பாளையம் படுகை அணையிலிருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் மூலம் காவிரி வடி நிலத்திலுள்ள பாசன அமைப்புகளான இராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க் கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோக னூர் வாய்க்கால்கள் நீர் ஆதாரம் பெறு கிறது. இதன் மூலம் சுமார் பல ஆயிரக்க னக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு வதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுபணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் கௌதமன், ஆவின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன், உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.