tamilnadu

img

நாமக்கல் எம்.பி. நன்றி அறிவிப்பு கூட்டம்

நாமக்கல், ஜன.25- நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதற்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் சனியன்று எலச்சிபாளையம் ஒன்றியத் திற்கு வேலகவுண்டம்பட்டி,தொண்டிபட்டி, பெரியமணலி, சின்னமணலி, கோக்கலை, கொன்னையார், எலச்சிபாளையம்,இலுப்புலி,மாணிக்கம்பாளையம், குமாரமங்கலம், சத்தியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.  இதில் திமுக ஒன்றிய செயலாளர் எம். தங்கவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர்  சு.சுரேஷ், ஒன்றிய குழு உறுப் பினர்கள் பி.சுரேஷ், ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தங்கராஜ், திமுக ஊராட்சி செயலாளர்கள் பழனிஆண்டவர், சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.   

;