நாமக்கல், ஆக. 23- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராசிபுரம் வட்டம், நாரைக் கிணறு பிளாக் - 2 காப்பு நிலப் பகுதியினை நிலஅளவை செய்வது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பிளாக் - 2 காப்பு நிலப் பகுதியில் நில அளவை செய்வது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்து ணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ. சரோஜா ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், ராசிபுரம் வட்டம், நாரைக்கிணறு பிளாக்- 2 காப்பு நிலப் பகுதியில் நிலஅளவை மேற்கொள்ளப் படாத பகுதிகளில், சிறப்பு நில அளவை குழுக்கள் மூலம் முழுவதுமாக நில அளவை செய்து வனத்துறைக்கு சம்மந்தப்பட்டவை மற்றும் பிற பகுதிகளை கண்டறிய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, மாவட்ட வரு வாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் கோட்டாட்சியர் மு. கோட்டைகுமார், திருச்செங்கோடு கோட் டாட்சியர் ப.மணிராஜ், உதவி வனபாதுகா வலர் சக்திவேல், ராசிபுரம் வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.