tamilnadu

img

மகளிர் சுயஉதவிக் குழுவினரை மிரட்டும் நுண்நிதி ஊழியர்கள் நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஆக. 8- கொரோனா பொதுமுடக்க காலத்தில், அரசின் விதிமுறைக்கு மாறாக பெற்ற கடன் திருப்பித் தர வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழு பெண்களை தகாத வார்த்தைக ளால் இழிவாகப் பேசும் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் நுண் நிதி நிறுவனங்களில் வாங் கிய கடன் தொகையை கொரோனா  பாதிப் பினால் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில், கடன் கொடுத்த நுண் நிதி  நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி பைனான்ஸ் உள்ளிட்ட கடன் கொடுத்தவர் கள் கடனை திருப்பிக் கட்டச் சொல்லி கட்டா யப்படுத்துவது, தகாத வார்த்தைகளில் திட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடு பட்டு வருகின்றனர்.  

ஆகவே, இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தி பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ்., புதுப்பாளையம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மோகன், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் ரவி, ஒன்றியக்குழு உறுப்பி னர் குமார், அசன், மாதர் சங்க நிர்வாகி ரமணி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படாவிட்டால் திங்களன்று பள்ளிபாளையம்  வருவாய் அலுவலர் அலுவ லகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வும் அறிவித்தனர்.