நாமக்கல், அக்.8- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தசைச்சிதைவுநோய் மற்றும் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ள தாவது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட இரண்டு கால்கள் மற்றும் கைகள் செயலிழந்த மாற்றுத்திறனா ளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகிறது. இதற்கான தகுதியான மாற்றுத்திறனாளி கள், அவர்களுடைய தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்கள் மற்றும் புகைப்படத்து டன் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகத்தில் தபால் மூலமோ அல்லது மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.