tamilnadu

img

NCERT பாடத்திட்ட மாற்றத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

NCERT பாடத்திட்ட மாற்றத்தின் மூலம் வரலாற்றை மாற்றி எழுதும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சுதந்திர காலக்கட்டத்தில் காந்தி படுகொலைக்கு பின்னர் ஆர்எஸ்எஸ் மீது மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது, பலமுறை காந்தியை கொலை செய்ய முயற்சித்தது, காந்தியை கொன்ற கோட்சே பிராமணர் என்பதையும், அவர் இந்து பயங்கரவாத பத்திரிகையின் ஆசிரியர்,குஜராத் கலவரங்கள், அவசர நிலை காலம், மம்லுக்,கில்ஜி,துக்ளக்,லோடி  முகலாயர்கள் ஆகிய முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாறு, வர்ணாசிரமம் வர்ண வேறுபாடுகள் தீண்டாமை, வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சூத்திரர்களும், பெண்களும், வேதங்கள் கற்க இயலாது, குஜராத் கலவரங்களின் பொழுது பிரதமர் வாஜ்பாய் அன்றைய முதல்வர் மோடியிடம் அரசு நிர்வாகமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற விமர்சனம் செய்தது ,பனிப்போர் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம், தொழில் புரட்சியும் நகரங்களின் முரண்பாடுகளும், ஜனநாயகமும்,பன்முகத்தன்மைகளும் ,தலித் இயக்கம், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத் என பல வரலாற்று நிகழ்வுகளை பாட நூல்களை நீக்கி அறிவித்தது. 
 காந்தியை கோட்சே சுட்டு கொன்றார் என்பது நீக்கம் என ஒன்றிய அரசு NCERT மூலம் பாட நீக்கம் என்ற பெயரில் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் உள்ளதை கண்டித்து ,தேசிய அளவிலான ஆர்ப்பாட்டம் அறைகூவல் விடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம்  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.