tamilnadu

img

பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 22- விளைநிலங்களின் பெட்ரோலிய குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவன குந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்கள் பதிக்க பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத் திட்டத்தை சாலை மார்க்கமாக செயல்படுத்த வலியுறுத்தியும் நாமக் கல் மாவட்டம் சிக்கநாயக்கன்பாளை யம், பலநாயக்கன்பாளையம், கொக்கராயன்பேட்டை, குமார பாளையம், இளையம்பாளையம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் விவசாய நிலங் களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் செ.நல்லாக்கவுண்டர், விவ சாய சங்க தலைவர் நடேசன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கருப்புக் கொடியுடன் கலந்துகொண்டு கண் டன முழக்கங்களை எழுப்பினர்.

;