நாமக்கல், செப்.5- குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் வியாழ னன்று நாமக்கல் மற்றும் தரும புரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளி களுக்கு சாதகமாக திருத்துவதை கைவிட வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும். மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை வாபஸ் பெற வேண்டும். விவ சாய விளைபொருட்களுக்கு லாபகர மான விலை தொடர்பாக டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு பெற்ற பணியாளர் களுக்கு சுழற்சி முறை இல்லாமல் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். வயது முதிர்ந்த அனைத்து விவசாயத் தொழி லாளர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற் சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் வியாழ னன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி. சிங்காரம் தலைமை வகித்தார். விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ந.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே. சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மு.து.செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வி.பி.சபாபதி, மாவட்ட துணைச் செய லாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். முடிவில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் கு.சிவராஜ் நன்றி கூறினார்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜி. நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் சோ. அருச்சுணன், மாவட்ட செயலாளர் எம்.முத்து ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். நிறை வாக சிஐடியு பொருளாளர் ஏ. தெய்வானை நன்றி கூறினார்.