தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் கடலூரில் இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக துறை வாரியாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாவட்டத் தலைவர் ஆர்.மாலதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் ஆ.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், வட்டப் பொருளாளர் ஏ.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.