tamilnadu

img

சிஐடியு ஐம்பதாவது ஆண்டு பொன் விழா கொண்டாட்டம்

நாமக்கல், மே 30-இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம், பேரவை மற்றும் கொடியேற்று நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. சிஐடியு நாமக்கல் மாவட்டக் குழு அலுவலகம் கே.கே. நினைவரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர்பி.சிங்காரம் தலைமை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் எல்.ஜெயக்கொடி வரவேற்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சி.பத்மநாபன் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன், விசைத்தறி தொழிலாளர் சங்க சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட செயலாளர் கு. சிவராஜ், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தனபால், மற்றும் வெங்கடேஷ்,ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல், குமாரபாளையத்தில் சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.சண்முகம் கொடியேற்றி வைத்தார். விசைத்தறி தொழிலாளர்கள் சங்க கிளை தலைவர் மேகநாதன், செயலாளர் பி.என்.வெங்கடேசன், சிபிஎம் கிளைச் செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக்மண்டல அலுவலகம் முன்பு சிஐடியுகொடியேற்றம் மற்றும் பெயர்ப்பலகை திறப்புவிழா நடைபெற்றது.இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார். சிஐடியு கோவைமாவட்டசெயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்திஉள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
தருமபுரி
தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வழி போக்குவரத்து சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் டி.நரேந்திரன், சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், தருமபுரி அருகே உள்ள தடங்கம் சரவண ஸ்பின்னிங் மில்லில் கொடியேற்று விழா மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில்அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், சி.நாகராசன், ரங்கநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியச்செயலாளர் கே.குப்பசாமி, சங்க நிர்வாகிகள் கண்ணதாசன், பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.