நாமக்கல், மே 12 - நாமக்கல்லில் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இன்ஃப்ராரெட் மூலம் வெப்பநிலையைக் கண்டறி யும் தானியங்கி கருவியில் தனது உடல் வெப்பநிலையை மாவட்ட ஆட் சியர் கா. மெகராஜ் பரிசோதித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அலு வலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் உடல் வெப்பநிலை சுகாதாரத்துறை செவிலியர்கள் மூலம் பரிசோதிக் கப்பட்டு வருகின்றது. மேலும் அலுவ லகத்திற்கு வரும் அனைவரும் சோப்பு போட்டு கைகழுவ தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது. இந்நிலையில், மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைவரது உடல் வெப்பநிலையை கணக்கிட தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப் பில் இன்ஃப்ரா ரெட் வெப்பநிலை மானியின் மூலம் அனைவரது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளது. மேலும் காலால் மிதித்து கிருமிநாசினி திரவம் வெளிப் படுத்தும் எளிய அமைப்பும் வெப்ப நிலை மானியின் அருகில் வைக்கப் பட்டுள்ளது. இவற்றை மாவட்ட ஆட் சியர் கா. மெகராஜ் இயக்கி வைத்து தனது உடல் வெப்பநிலையை பரி சோதித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் கோட்டாட்சியர் மு. கோட்டை குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் ரா. ரகுநாதன், தமிழ்மணி, எ.எஸ். ராஜ் குமார், ரா. சரவணகுமார். வெ. ராஜேஸ், ந. அரவிந்தன், எஸ். சிவக் குமார், வெங்கடேசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.