நாமக்கல், ஏப்.27- நாமக்கல் மாவட்டத்தில் பானி புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு துறையினரும், அலுவலரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அந்தந்த துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.