tamilnadu

img

இலவச மடிக்கணினி கேட்டு வகுப்பை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

நாமக்கல், ஆக.8- நாமக்கல் மாவட்டம், இராசி புரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில்  கலை மற்றும் கணினி  பாடப்பிரிவில் பயிலும் மாணவி களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படாததை கண்டித்து வியாழனன்று மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி தற்போது  வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், இராசிபுரம்- நாமக்கல் சாலையில் உள்ள தேசிய பெண்கள்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவிகள் 200 பேர் படிக்கின்றனர். இதில் 140 மாணவிகளுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டன. மற்ற மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த மற்ற மாணவிகள்  வகுப்பு புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதையறிந்த இராசிபுரம்  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது மாணவிகள், பள்ளி தலை மையாசிரியர் பாபு நேரில் வந்து  பதில் கூறினால்தான் போராட் டத்தை கைவிடுவோம் என கூறினர்.  ஆனால், பள்ளி தலைமையாசிரியர் வர மறுத்து விட்டதாக  காவல்துறையினர் தெரி வித்தனர். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட கல்வி அலுவலர்  மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இதில், விடுபட்ட மாணவி களுக்கு விரைவில் மடிக் கணினி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படுமென  உறுதியளித்தார். இதை யடுத்து மாணவிகள்  போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.  2017-2018 மற்றும் 2018-2019  ஆம் ஆண்டு மாணவ, மாணவி களுக்கும் தமிழக அரசு இலவச மடிக் கணினி முறையாக வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.