நாமக்கல்:
ஜவ்வரிசி கூடுதல் விலை கிடைக்கஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர் களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சக்தி கணேசன்,எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலப்படம் இல்லாமல்ஜவ்வரிசி தயாரிப்பது மற்றும் ஜவ்வரிசி தொழிலை பாதுகாப்பது, ஜவ்வரிசிக்கு அதிக விலை கிடைக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களது ஆலோசனை களை தெரிவித்தார்கள்.பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும் போது கூறியதாவது:இந்தியாவிலேயே சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்கள் தான் ஜவ்வரிசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்கின்ற விவசாயிகளும் உள்ளனர்.இத்தொழிலில் அதிக லாபம் பெற சிலர் மக்காச்சோள மாவை கலப்படம் செய்வது உள்ளிட்ட சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மற்றஜவ்வரிசி உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் இத்தொழிலை நம்பி உள்ளவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.இத்தொழில் சரியான முறையில் நடைபெற சேலம் சேகோ சர்வ்அமைப்பு பல்வேறு தரக்கட்டுப் பாடுகளையும், தர பரிசோதனைகளையும் மேற்கொண்டு ஜவ்வரிசி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.மேலும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஜவ்வரிசி ஆலைகளிலும் கண்காணிப்பு கேமராபொருத்த அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள்கேமராக்கள் பொருத்தி மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி உற்பத்திசெய்யும் பணி முழுவதும் தொடர்ந்துபதிவு செய்யப்படுகிறது. மேலும் மாவட்டஉணவு பாதுகாப்புத்துறையின் மூலம் ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.