நாகர்கோவில்:
நாகர்கோவில் கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச்சேர்ந்த ராமதாஸ் மகன் ரஞ்சித்குமார் (31)). நாகர்கோவிலில் மருந்துக்கடை நடத்தி வந்த இவர் தனது மனைவிராசி (28), அக்க்ஷயா (5), அனியா (3) ஆகியோருடன்தனது தந்தை வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.
கடந்த வருடம் ரஞ்சித்குமார் உடல்நிலை பாதிக்கப் பட்டு காலமானார். அதன்பிறகு ரஞ்சித்குமாரின் மனைவி ராசி தனது மாமனார்-மாமியாருடன் வசித்து வந்தார். கணவர் இறந்ததால் வருமானம் இல்லாமல் தவித்த ராசி, தனதுமாமனார் கூலி வேலை செய்து கொடுக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.கணவர் இறப்பு, வறுமையால் பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருந்த ராசி திங்களன்று தனது மகள்கள்அக்க்ஷயா, அனியா ஆகியோருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் தனதுஉடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார். இதுதொடர்பாக நேசமணி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.