நாகர்கோவில்:
பிரதமர் மோடி கடந்த ஆண்டுஅறிவித்த கிராமங்களில் வீடுகளுக்கானகுடிநீர் இணைப்பு திட்டத்தை மூடி மறைத்து புதிய இணைப்புகளுக்கு கூடுதல் தொகை வசூலித்து பாஜக தலைமையிலான ஊராட்சியில் முறைகேடு செய்ததும், அதிகாரிகள் துணை நிற்பதும் அம்பலமாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக் கமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது தர்மபுரம் ஊராட்சி. இங்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் பெரும் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஇந்த ஊழலை அம்பலப்படுத்தி பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நேரடிபோராட்டங்களும் நடத்தியுள்ளது.நடந்துள்ள முறைகேடுகள் குறித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் எஸ்.டி.ராஜ்குமார் விளக்கினார். 2020 ஜுலையில் நடந்த தர்மபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி பதிவுக் கட்டணமாக ரூ.200, இணைப்பு கட்டணமாக ரூ.3000 வசூலிக்க முடிவு செய்தனர். ஆனால் ரசீது இல்லாமல் ரூ.6000 முதல் 9000 வரை கூடுதல் தொகை வசூலிக்க முடிவு செய்தது நடவடிக்கை குறிப்பில் இடம்பெறவில்லை. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் விஜயராகவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்ட நடவடிக்கை குறிப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
இந்த ஊழல் முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை கோரி 17 ஆம் தேதி ஈத்தாமொழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மறுநாள் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்புஉட்பட 5 இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. அதன்பிறகு பிடிஓ ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் என இந்த ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப் பட்டன. முறையான நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்புக்காக ஜோனல்பிடிஓவை இடமாற்றம் செய்திருக்கிறார் கள் என்றார்.ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள சித்திரன்விளையில் வசிக்கும் கண்ணன் கூறுகையில், என்னிடம் 9 ஆயிரத்து 200 ரூபாய்வாங்கினார்கள். இதுவரை எனக்கு குடிதண்ணீர் தரவில்லை. இங்கு மட்டும்15 பேருக்கு மேல் இணைப்புக்காக கூடுதல் பணம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறோம் என்றார். ஊராட்சியில் மொத்தம் 151 இணைப்புகளுக்கு இதுபோல் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊழல்முறைகேடுகள் அம்பலமானதும் இராஜாக்கமங்கலம் பிடிஓ தர்மபுரம் ஊராட்சிதலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் (ந.க.எண்:ஆ5/1317/2020, நாள்:20.7.2020). அதில், “தற்போது ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டு திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
எனவே, விதிமுறைகளுக்கு அப்பாற் பட்டு வைப்புத்தொகையுடன் பெறப்பட்ட கூடுதலான தொகையினையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கிவிட்டு அதன் விபரத்தினை உடன் இவ்வலுவலகம் தெரிவிப்பதுடன் ஜல் ஜுவன்மிஷன் திட்டம் செயல்படுத்தும்போது வைப்புத்தொகை பயனாளிகளிடமிருந்து வாங்கலாம் என்ற விவரத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறப் பட்டுள்ளது.இதுகுறித்து இதே ஊராட்சியைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான என்.எஸ்.கண்ணன் கூறுகையில், இப்படித்தான் உதவி இயக்குநரின் (ஊராட்சிகள்) கடித நகல் 7.2.2020 தேதியிட்டு வந்தது. அது தர்மபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் கணேசன் யாரையும் பேசவிடாமல் தடுத்தது பற்றிய புகார் மீது விசாரணை கோரி இராஜக்கமங்கலம் பிடிஓவுக்கு அனுப்பிய கடிதம் அது. இதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.ஊராட்சி மன்ற பெண் தலைவரை சுயமாக செயல்பட விடாமல் அவரது பெயரால் கணவர் கணேசன் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் என்பதால் அதிகாரிகள் தலையிட மறுக்கிறார்கள். இவர் முன்பு தலைவராக இருந்தபோது கொய்யன்விளையிலிருந்து குடிநீர் குழாய் அமைத்து வத்தகன்விளை மேல்நிலை தொட்டிக்கு நீர் ஏற்றும் திட்டத்தில் முறைகேடு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் பொறியாளர் கார்ட்டர் என்பவர் சஸ்பென்ட் ஆனதாக கூறினார்.இப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி என்றாலும் இவரது கணவர் ஆர்.கணேசன் இல்லாமல் அணுவும் அசையாது. இதற்கு முன்பு தொடர்ச் சியாக இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தவர் கணேசன். பொன்.ராதாகிருஷ்ணனின் மத்திய அமைச்சராக இருந்தபோது அவருக்கு வலது கரமாக செயல்பட்டவர். பாஜகவசம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில்நடைபெறும் பெரும் ஊழல்களுக்கு தர்மபுரம் ஊராட்சியே சான்றாக உள்ளதுஎன்றார். இராஜாக்கமங்கலம் பிடிஓ அன்பு இந்த ஊழல் முறைகேடுகளுக்கு கேடயமாக உள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார்.
*****************
அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்
தர்மபுரம் ஊராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் மீது பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்டஅனைத்துக்கட்சிகள் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதிங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திமுக ஒன்றிய செயலாளர் எ.லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், என்.சுரேஷ்ராஜன், விசிக மாவட்ட துணை செயலாளர் தொல்காப்பியன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் இராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர்எஸ்.டி.ராஜகுமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், திமுக நிர்வாகி
குமார் சேரலாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*****************
பிரதமரும் அறிவிப்பும் முறைகேடுகளும்
2019 ஆகஸ்ட் 15 பிரதமர் மோடியின் சுதந்திரதின அறிவிப்பில் கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் (JJM) திட்டம் இடம்பெற்றிருந்தது. இத்திட்டத்தின் அமலாக்கம் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செக்காவத் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமியுடன் காணொலி மூலம் விவாதித்தார். ஓராண்டுக்கு முன்பு பிரதமர் அறிவித்ததிட்டத்தை இப்போதுதான் அதிகாரிகள் அறிந்து கொண்டதுபோல் கடிதம் எழுதுகிறார்கள். பாஜக தலைவர்கள் அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து பெரும் ஊழல் செய்வதை தர்மபுரம் குடிநீர் இணைப்பு முறைகேடு அம்பலப்படுத்தியுள்ளது.
தொகுப்பு : ஜீன்பால், சி.முருகேசன்