நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற வேலைத் திட்டத்தில் வேலைவழங்க கேட்டு பேரூராட்சி அலுவலகங்களில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் செப்டம்பர்29 முதல் அக்டோபர் 6 ஆம் தேதிவரை மனு கொடுக்கும் இயக்கம்நடைபெற்று வருகிறது.
இதில் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் மனு அளிக்க சென்றனர். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர், நான் யாரிடமிருந்தும் மனுவை வாங்க மாட்டேன். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தால்தான் நான் மனுவை வாங்குவேன்என கூறியதுடன், பொதுமக்களிடமிருந்து எந்த மனுவையும் வாங்கவில்லை. இதுகுறித்து மாவட்டஆட்சியரிடம் புகார் தெரிவிப்போம் என கூறி தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கலைந்து சென்றனர். இந்நிகழ்வில் அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி சாகுல் ஹமீது,மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.