நாகர்கோவில், ஆக.1- குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை வீடுகளிலிருந்து மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல தற்போது இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போதாதநிலை உள்ளது. இதனால் கூடுதலான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்து போராட்டங்களும் நடை பெற்றன. மேலும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு கூடுதலாக மூன்று ஆம்புலன்ஸ் வாக னங்களை குமரி மாவட்டத்திற்கு வழங்குவ தாக அறிவித்தது. தமிழக அரசு அறிவித்த 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில், இரண்டு வாகனங்கள் சனிக்கிழமை முதல் இயங்கத் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டது. மேலும் ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் அரசு தரப்பில் இருந்து அறிவித்திருந்த நிலை யில் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.