tamilnadu

img

நாகர்கோவிலில் மூத்த தோழர் எம்.ராஜப்பன் காலமானார்....

நாகர்கோவில்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநந்திக்கரை கிளை உறுப்பினரும், மூத்த தொழிற்சங்கவாதியுமான தோழர் எம்.ராஜப்பன் (74) செவ் வாயன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாயன்று மாலைதிருநந்திக்கரையில் நடைபெற் றது.

அவரது உடலுக்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, வட்டார செயலாளர் விஸ்வம்பரன், கிளை செயலாளர் நாணு குட்டன், சிஐடியு தோட்டத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் வல்சகுமார், திருநந்திக்கரை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநிர்வாகிகள், அனைத்து சங்கநிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்இறுதி அஞ்சலி செலுத்தினர். தோழர் ராஜப்பனுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.