tamilnadu

img

குமரியில் எச்.வசந்தகுமார் எம்பி இறுதி நிகழ்ச்சி... அரசியல் கட்சியினர் அஞ்சலி

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடல் கன்னியாகுமரி அருகில் உள்ள அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் ஞாயிறன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக காங்கிரஸ் கட்சியின்செயல் தலைவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் ஆகஸ்ட் 10ஆம்  தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி தமிழ்செல்வி, உதவியாளர் கோபி ஆகியோரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து எச்.வசந்தகுமார் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர்நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் வெள்ளியன்று மாலை உயிர் இழந்தார். முன்னதாக அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுவந்தது. இதையடுத்து அவரதுஉடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சென்னை தி.நகர் நடேசன் தெருவில்  உள்ளஅவரது இல்லத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\

எச்.வசந்தகுமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலை வழியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ் வரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வசந்தகுமார் உடலுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சார்பில் கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், அகிலஇந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

;