tamilnadu

img

புத்தாக்க திட்டம் அமல் கோரி உண்ணாவிரதம்...

நாகர்கோவில்:
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தினமாக அனுஷ்டித்து கருப்பு உடை அணிந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

அக்டோபர் 1 பிஎஸ்என்எல் அமைப்புதினமாகும். அதையொட்டி பிஎஸ்என்எல் புத்தாக்க திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.ராஜூ, பி.ஆறுமுகம், கே.ஜார்ஜ், சி.ஜோசப், சி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.