நாகர்கோவில்:
மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட இறந்த கிருஷ்ணன்குட்டி என்பவரின் உடலை சேதப்படுத்தி வழங்கிய குலசேகரம் மருத்துவமனைநிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் சந்தை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், காரோடு பஞ்சாயத்து துணை தலைவர் சசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எச்.ராஜதாஸ் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, மணி, சின்னப்பன், ரவீந்திரன், ஜூலியட்மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.