tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கும் மாணவர் விரோத புதிய  கல்வி கொள்கை, இந்தி திணிப்பை கண்டித்து பெரியார் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீஒமு நிர்வாகி கணேசன்தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அகமதுஉசேன், என்.எஸ்.கண்ணன், தமுஎகச மாவட்டநிர்வாகி சந்திரன், பேராசிரியர் மனோகர் ஜஸ்டஸ், மாரிமுத்து பேசினர். தமுஎகச மாநகரதலைவர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கட்சிமாநகரச் செயலாளர் கே.மோகன், பெஞ்சமின்கலந்து கொண்டனர். தக்கலை தாலுகா அலுவலகம் முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வேலப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுஜா ஜாஸ்பின், தீஒமு வட்டார துணை தலைவர் சைமன் சைலஸ், பெரியார் திராவிடர் கழக தலைவர் நீதியரசன் பேசினர்.  முரளிதரன், பத்மநாபபிள்ளை, அரங்கசாமி, சாவித்ரி, சிதம்பரம் கலந்து கொண்டனர். 

;