tamilnadu

img

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 22- காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களுடன், போக்குவரத்து காவல் துறையி னர் போடும் பொய் வழக்குகளை கண்டித்தும் புதனன்று தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஊரடங்கால் மோட்டார் தொழில் முற்றி லும் நலிவடைந்துள்ளது. டீசல்- பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட் கோரிக்கைகளை முன் வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை பொதுச்செயலாளர் எஸ்.பரமசிவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த், சிஐடியு மாநில குழு உறுப்பி னர் எஸ்.அந்தோணி, ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் என்.ஆசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;