tamilnadu

img

தோழர் பி.திவாகரன் 18-ஆம் நினைவு தினம்: செறுகோல் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி...

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட முன்னாள் செயலாளரும், தாய் தமிழக இணைப்பு போராளியுமான தோழர் பி.திவாகரனின் 18 ஆம் நினைவு தினம் ஞாயிறன்று (அக்.25) அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி, செறுகோலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, என்.உஷா பாசி, கே.தங்கமோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ் குமார், கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட வட்டார நிர்வாகிகள், சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.