tamilnadu

img

விதவை, மாற்றுத்திறனாளிகள்  வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் மாயா வெங்கடேசன் உறுதி

 தரங்கம்பாடி டிச.22- பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மக்கள் ஆதரவுடன் சுயேட்சையாக பைனாகுலர் சின்னத்தில் போட்டியிடும் மாயா வெங்கடேசன், கிறிஸ்தவ தேவா லயங்களுக்கு ஞாயிறன்று சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி வாக்கு சேகரித்தார். பின்னர் ராஜராஜன் நகர், நக்கீரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு கேட்டார். விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதி யோர்களின் வாழ்வாதாரம் மேம்படைய பாடுபடுவேன் என வாக்குறுதியளித்து வாக்கு சேகரித்தார்.