நாகப்பட்டினம், செப்.22- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்தின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுப் பேரவைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.எஸ்.கோபாலன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.முத்தையன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சாந்தி, ஏ.மீரா, வி.தொ.ச.ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வி.ச.ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இச்சங்கங்களின் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என்.எம்.அபுபக்கர், ஏ.எம்.பாலசுப்பிரமணியன், ஏ.சந்திரசேகர், கே.சுந்தரமூர்த்தி, எல்.ராஜேந்திரன், கே.நாகராஜன், ஜி.கணேசன், எஸ்.மோகன் இங்கர்சால், பி.கண்ணகி, எம்.தங்கராசு, வி.கணேசன், டி.குமார், எம்.அஞ்சம்மாள், கே.சுதாகர், எம்.மரகதம், ஏ.அன்பழகன், கே.கருப்பையன், ஏ.சந்திரசேகர், ஜி.கல்யாணசுந்தரம், பி.ஜெயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.