சீர்காழி, பிப்.8- நாகை மாவட்டம் கொள்ளி டம் அருகே வடரெங்கம் கிராமத்தி லிருந்து பனங்காட்டாங்குடிக்குச் செல்லும் 4 கிலோ மீட்டர் தூர தார்ச்சாலை மேம்படுத்தப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன. ஆனால் தரமற்ற முறையில் போடப்பட்ட தால் இந்த சாலை குறுகியும் மேடும் பள்ளமாகவும், கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. இதனால் இச்சாலை வழியே செல்வோர் மிகுந்த அவதியடை கின்றனர். மோட்டார் பைக் மற்றும் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனத்தில் செல்வோர், மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். நடந்து செல்லும் பெரியோர்கள் ஜல்லிகளில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். வட ரெங்கத்திலிந்து பனங்காட்டாங்குடிக்குச் செல்லும் இந்த சாலை அப்பகுதியில் உள்ள 10 கிராம மக்களுக்கு முக்கிய போக்குவரத்து சாலையாக இருக்கிறது. கிராமச் சாலைகள் மேம்பாடுத் திட்டத்தின் கீழ், இந்த சாலையை மேம்படுத்த ஒரு மாத த்துக்கு முன்பே அனுமதியளிக்கப்பட்ட போதும் நடைமுறை ப்படுத்தவில்லை. எனவே இந்த சாலையை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.