tamilnadu

செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் முதல் கூட்டம்

தரங்கம்பாடி, பிப்.8- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்ற 30 ஒன்றியக்குழு வார்டுகளுக்கான தேர்தலில், திமுகவைச் சேர்ந்த 19 பேர் வெற்றி பெற்று, திமுகவை சேர்ந்த நந்தினிஸ்ரீதர் தலைவராகவும், பாஸ்கரன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து முதல் ஒன்றியகுழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  துணை தலைவர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வெண்ணிலா, துளசிரேகா, ராபியாநர்கீஸ்பானு மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  வரவு, செலவு கணக்குகள் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை கூறினர். அவர்களுக்கு பதில் அளித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் பேசினார். ஒன்றியக் குழு தலைவர், கவுன்சிலர்கள் தங்களது பகுதியின் குறைகளை உடனடியாக சீர்செய்து தருவதாக உறுதியளித்தனர்.

;