tamilnadu

புத்தூர்  அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி  

சீர்காழி, மார்ச் 3- நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமா ண்டு பட்டவகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்தார். முனைவர் கணேசன் வரவேற்றார். பயிற்சி யில் பன்னாட்டு மனிதவள மேம்பாட்டு பயிற்றுநர் முனைவர்கள் மகேஸ்வரன், சந்திரசேகரன் ஆகியோர் பயிற்சியளித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர் சசிகுமார் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் லெட்சுமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

;