சீர்காழி, டிச.11- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சி களில் 200 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி குளங்களும், கோயில் குளங்களும் இருந்தன. இவற்றில் சுமார் ஆயிரம் குளங்கள் இருக்கும் இடம் தெரியா மல் போய் விட்டன. குளங்கள் ஆக்கி ரமிக்கப்பட்டு அதில் குடியிருப்புக ளும், கட்டிடங்களும் எழும்பி யுள்ளன. இதனால் நிலத்தடி நீரை போதிய காலத்திற்கு சேமித்து வைக்க முடியாத நிலைக்கு வந்து விட்டது. பாசன கிளை வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பால், தண்ணீர் வடிவதி லும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊராட்சிகளுக்குச் சொந்தமான இடங்கள் தொடர்ந்து ஆக்கிர மிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கொள்ளிடம் மாதிரவேளுரில் பொதுப்பணித் துறைக்கு சொந்த மான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து துண்டி க்கப்பட்டுள்ளது. கொன்னக்கா ட்டுப் படுகையில் பொதுப்பணித் துறையின் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுள் ளது. கீரங்குடி கிராமத்திலும் பாசன வடிகால் வாய்க்கால் மூடப்பட்டுள் ளது. தண்ணீர் வயலுக்கு செல்ல வும் முடியவில்லை. வடியவும் வழி யில்லை. கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி, மாதிரவேளுர், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிக ளிலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் வழி நடைபாதை கிளை வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. திருமுல்லை வாசல் கிராமத்தில் உள்ள ஒரு பொதுக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு தற்பொழுது ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் சில அதி காரிகள் ஆதரவுடன் ஆக்கிர மிக்கப்பட்டு வருகிறது. பொதுச் சொத்துக்களை ஆக்கிரமிப்ப வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏழை எளிய நிலமற்ற வர்களுக்கு பொதுச்சொத்துக்களை அரசு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜெகசண்முகம் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.