நாகப்பட்டினம், டிச.5- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ளது ஒக்கூர் ஊராட்சி. இதனைச் சுற்றி, ஒக்கூர், கடமங்குடி, மூங்கில்குடி, விளாம்பாக்கம், மூலப் படுகை, கோகூர் உள்ளிட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 1700 க்கு மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் தலித் மக்கள், ஏழை எளிய விவசா யத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள். இந்த கிராமங்களையொட்டி வெட்டாறு ஓடு கிறது. கோகூர்- விளாம்பாக்கம் கிராமங்களை இணைக்கும் இந்த வெட்டாற்றில் 2017-ல் ஒரு மரப்பா லம் கட்டப்பட்டது. இந்த மரப்பாலம் வழியாகத் தான் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும் கீழ்வேளூர், திருவாரூர் சென்று வந்தார்கள். மரப்பாலம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து விழுந்து விட்டது. சாதாரண காலங்களில் ஆற்றில் தண்ணீர் இருக் காது. அல்லது சிறிதளவு தண்ணீர் தேங்கிக் கிடக்கும். ஆற்றில் இறங்கித் தான் மக்களும், மாணவர்களும் கடந்து செல்வார்கள். கடந்த 10 நாட்களாக நாகை மாவட்டத்தில் விடாது கனமழை பெய்து வருவதால், வெட்டாற்றில் கழுத்தளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. 9 கிலோ மீட்டர் தூரம் சென்றா ல்தான் ஒரு நிரந்தரப் பாலம் உள்ளது. அதன் வழியே செல்வதென்றால் வெகுதூரம் நடக்க வேண்டும். நேரமும் அதிக மாகும். எனவே, கீழ்வேளூர் பள்ளிகளுக்கும், திருவா ரூர் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ -மாணவி யர் வெட்டாற்றில் கழுத்தளவு ஆழத்தில் சாதாரண உடையில் சென்று, ஆற்றைக் கடந்த பின், பள்ளிச் சீருடையை அணிந்து செல்கின்றனர். பெரிய மாண வர்கள் இப்படிச் செல்கிறார்கள். சிறுவர்களைப் பெற்றோர் தூக்கிக் கொண்டு, ஆற்றைக் கடந்து, மறுகரையில் விடுகிறார்கள். பொதுமக்களும் ஆற்றில் இறங்கிச் செல்கிறார்கள். நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாகியும், இந்த கிராமங்களில் வாழும் மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல இந்த வெட்டாற்றில் ஒரு நிரந்தப் பாலம் கட்டித் தர எந்த அரசும், மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி நிர்வா கமும் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை. எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பாலம் கட்டித் தர வேண்டும் என்று இங்கு வாழும் மக்களின் கோரிக்கை யார் காதில் தான் விழுகிறது? ஏனெனில், இந்த மக்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள்.