tamilnadu

img

புதிய பாலம் திறப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டப் பகுதிகளில் ரூ.6 கோடியே, 77 லட்சத்து, 77 ஆயிரம் மதிப்பீட்டில், பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் புதிய பாலம், புதிய கட்டி டங்களை வியாழக்கிழமை அன்று தமிழகக் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியைச் சேர்ந்த கைக்காட்டிப் பகுதியில் ரூ.2 கோடியே, 31 லட்சத்து, 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், பிராந்தியக்கரைப் பகுதியில் புதிய பாலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை, அங்கன்வாடிக் கட்டிடம், தென்னடார் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், பிள்ளையாரடிப் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளிட்டவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட முகமை வளர்ச்சி இயக்குநரும் கூடுதல் ஆட்சி யருமான எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.