tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இலவச மின்சாரத்தை நிறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் இலுப்பூர் கடைவீதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் என்.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் டி.இராசையன், மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.