tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக விவசாயிகளை வெளியேற்றினால் போராட்டம்

சீ்ர்காழி, மே 8-தமிழ்நாடு விவசாய சங்க சீர்காழி வட்டக் குழு கூட்டம், நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்றது. வட்டத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வட்டத் துணை செயலாளர் பாக்யராஜ் வரவேற்றார். செயலாளார் நாகையா, பொருளாளர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் சுந்தரலிங்கம், சாமிதுரை முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராசையன் சிறப்புரையாற்றினார். வட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன் நன்றி கூறினார். கூட்டத்தில், டெல்டா மாவட்டங் களை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் சிதம்பரத்திலிருந்து வேளாங்கண்ணி வரை உள்ளதால் விவசாயிகளுக்குபெரும் பாதிப்பு ஏற்பட்டு, விளை நிலங்களும்பாதிக்கும்சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப் பட்டால் 60 கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் வெளியேற்றும் சூழ்நிலை ஏற்படுவதால் இதற்கு கண்டனத்தை தெரிவிப்பது. விவசாயிகளை நிலங் களை விட்டு வெளியேற்ற முடிவுசெய்திருப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டால்பல போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;