tamilnadu

சிறப்பு கிராம சபா கூட்டங்கள்

சீர்காழி, நவ.9- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பன்னங்குடியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடை பெற்றது. கவுரவத் தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சுமதி வரவேற்றார். மண்டல துணை வட்டார  வளர்ச்சி அலுவலர் லெட்சுமி, பணி மேற்பார்வையாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். சமூக தணிக்கையாளர் தர்மராஜ், சமூகத் தணிக்கையின் அவசியம் குறித்து பேசினார். கூட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மற்றும் பணியில் ஈடுபட்டோர்களின் விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது.  இதே போல் தாண்டவன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு கவுர வத் தலைவைர் நாகராஜன் வரவேற்றார். பணி மேற்பார்வையாளர் வேல்கண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார தணிக்கை யாளர் பாலமுருகன், சமூக தணிக்கை குறித்து பேசினார். கடந்த 6 மாத காலத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகள் உள்ளிட்ட விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது.