நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் பட்டு நூல்காரத்தெரு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிலிருந்து கழிவுநீர் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையிலேயே கழிவு நீர் வழிந்தோடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அவ்வழியே சென்று வருபவர்களும் புகார் கூறுவதோடு, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.