தரங்கம்பாடி, பிப்.25 நாகை மாவட்டம், திருவிளை யாட்டம் கிராமத்திலுள்ள சௌரிராசன் தொடக்கப்பள்ளியில் காவலராக பணி புரியும் கலிவரதன்(78). இவருக்கு அருகேயுள்ள குமாரமங்கலம் தான் பூர்வீகம். இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் பணி செய்யும் பள்ளியி லேயே தங்கி அங்கேயே வசித்து வரு கிறார். இவர் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக பள்ளியின் வளாகத் தோட்டத்தில் இயற்கை காய்கறிகளை பயிரிட்டு மாண வர்களின் சத்துணவுக்கு வழங்கி வருகி றார். இதுகுறித்து அவர் கூறியதிலி ருந்து, எனக்கு ஒரு மகன் தான். அவரும் விவசாயி தான். நான் இந்த பள்ளிக்கூடத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகிறேன். சின்ன ஞ்சிறு குழந்தைகள் அரிச்சுவடி படிக்க வருதுங்க, எல்லா பிள்ளைகளும் என் பேரப் பிள்ளைகள் போல நெனச்சு தான் நான் இந்த பள்ளி வளாகத்த அழகுப்ப டுத்தி வருகிறேன். பலவிதமான அழகு செடிகளை வளர்ந்து அதனை பராமரித்து வரேன். அதேப் போல தோட்டத்தில் இய ற்கையான உரங்கள் மூலம் மரபணு மாற்றம் செய்யப்படாத கலப்படமில்லா விதைகளை தேடி கண்டுப்பிடிச்சி ஒவ்வொரு கால சூழலுக்கேற்ப காய்க றிகள், கீரை வகைகளை பயிரிடு கிறேன். எதையுமே காசுக்கு விற்க மாட்டேன். நாள்தோறும் பள்ளியில் தயார் செய்யப்படும் சத்துணவுக்கு தந்துடுவேன். ஒவ்வொரு நிமிடமும் நமக்கான துங்கறதுனால எதாவது செஞ்சிக்கிட்டே இருப்பேன். சின்ன பிள்ளைகள் சாப்பி டுற காய்கறிகள் இயற்கையா இருந்தா தானே உடம்புக்கு நல்லது என கூறு கிறார். தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லோ ருமே எனக்கு உதவியா இருக்காங்க அத னால வயது முதிர்ச்சி ஒரு பொருட்டா தெரியல என உற்சாகமாக கூறும் முதியவர் கலிவரதன், கடந்த 5 ஆண்டு க்கும் மேலாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிறுநீர் பையை தன் உடம்போடே தூக்கிக் கொண்டே இயற்கை விவசாயத்தை செய்து வரு கிறார். இயற்கையோடு இயற்கையாய் சுறு சுறுப்பாய் வாழும் முதியவர் கலிவரதன் திருவிளையாட்டம் கிராமத்தின் நம்மா ழ்வார் என அப்பகுதி இளைஞர்கள் கூறு கின்றனர். -செ.ஜான்சன், தரங்கம்பாடி