tamilnadu

img

ஏவிசி கல்லூரியில் கருத்தரங்கம், பயிற்சி பட்டறை

மயிலாடுதுறை, மார்ச் 12- மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி கணிதத்துறையில் பல்கலைக்கழக நிதி உதவியுடன் கூடிய கருத்தரங்கு, “கணிதத்தின் தற்காலப் போக்கு” என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். கோவை அமிர்தா பொறியியல் பள்ளி பேராசிரியர் கே.சோமசுந்தரம், கருத்தரங்கின் முதல் அமர்வில் “சிப்பில் பிணையத்திற்கான வரைப்படக் கோட்பாடு விதிமுறைகள்” பற்றி பேசினார். இரண்டாம் அமர்வில் மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி, காரைக்கால் வளாகம் மேலாண்மைதுறை இணைப் பேராசிரியர் எம். தர்மலிங்கம், “புள்ளியியலில் அணி மற்றும் அதன் பயன்பாடுகள்” குறித்து பேசினார். மூன்றாம் அமர்வில் தஞ்சாவூர் ஏ.வி.வி.எம்.ஸ்ரீ புஷ்பம் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஏ.வெங்கடேஷ் கணித முறை மாதிரிகள் பற்றி பேசினார். நிறைவு விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் கே. மேகநாதன் தலைமை உரையாற்றினார்.  பயிற்சி பட்டறை ஏ.வி.சி. கல்லூரியில் அறிவியல் மாணவர் மன்றம் சார்பில் ஒருநாள் பசுமை இலக்கியம் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரியின் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை முன்னாள் முதுகலை மாணவர் (1996-1998) முனைவர் ப.ஜெகநாதன், அறிவியல் அறிஞர், மைசூர் இயற்கை பாதுகாப்பு நிறுவனம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பசுமை இலக்கியம் குறித்த பயிற்சியை வழங்கினார்.