tamilnadu

img

சீர்காழியில் சாலை ஆக்கிரமிப்பு  பொதுமக்கள் கடும் அவதி

 சீர்காழி, செப்.17- நாகை மாவட்டம் சீர்காழியில் பிடாரி தெற்கு வீதி, சட்ட நாதர் காலனி, மேலமடவிளாகம் தெரு ஆகிய நான்கு வீதியில் இணையும் முக்கிய சாலை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மற்றும் துணிக்கடை ஆகிய நிறுவனங் கள்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி இரும்பு கேட் அமைத்து உள்ளார்கள். இதன் அருகிலேயே செயல்படாத போலீஸ் நிழற்குடை உள்ளது. இதனால் பிடாரி தெற்கு வீதி மற்றும் சட்டநாதர் காலனி வழியாக வரும் பாதசாரிகள் சாலையின் ஓரமாக நடந்து செல்ல முடியாமல் ரோட்டின் வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக இதே வீதியில் சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புதிய பேருந்து நிலையம் செல்ல சாலையின் ஓரமாக செல்ல முடியாமல் நடுரோட்டில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.  தற்போது இந்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரும்பு கேட் அருகே உடைந்த பெரிய கண்ணாடி துண்டுகள் வைக்கப் பட்டு உள்ளன. பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள இந்த தனியார் ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலை துறை, காவல் துறை, நகராட்சி துறை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை யாக உள்ளது.