tamilnadu

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை

 தரங்கம்பாடி, அக்.19- நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், இந்திய மாணவர் சங்கத்தின் தரங்கம்பாடி வட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மகேஷ் தலைமை வகித்தார். தீபிகா,பிரவின், லெலின்,கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை வரவேற்று விஜயராஜ் பேசினார், மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் ப.மாரியப்பன் உரையாற்றினார். வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர் மு.குமரேசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். நிறைவாக மாவட்ட செயலாளர் அ.அமுல்காஸ்ட்ரோ புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரையாற்றினார். புதிய  வட்ட தலைவராக மகேஷ், செயலாளராக விஜயராஜ் உள்ளிட்ட 21 பேர் கொண்ட வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் 5, 8-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை நிரந்தரமாக வாபஸ் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;