tamilnadu

img

மாணவர்களுக்கு  வினாடி- வினாப் போட்டி

சீர்காழி, அக்.19- கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற துளிர் வினாடி வினா போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை வகித்தார். முன்னாள் நாகை மாவட்ட அறிவியல் இயக்க இணைச் செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் வரவேற்றார்.  போட்டி நடுவர்களாக ஆசிரியர்கள் வெங்கடேசன், சந்திரன், சேகர், ஹேமமாலினி, புனிதா ஆகியோர் இருந்தனர்.  மேல்நிலைப்பிரிவில் துளசேந்திரபுரம் அரசுப் பள்ளி முதலிடத்தையும், ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், உயர்நிலைப்பள்ளியில் ஆச்சாள்புரம் அரசுப் பள்ளி முதலிடத்தையும், ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.  இடைநிலைப் பிரிவில் அளக்குடி எஸ்எம்எஸ் நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், பழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது. அறிவியல் இயக்க செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.