தரங்கம்பாடி: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் 380 தூய்மை காவலர்களுக்கு ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் தனது சொந்த நிதியிலிருந்து 5 கிலோ அரிசி, பிரட், மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண நிதி ஆகியவற்றை வழங்கினார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரங்குடி, மேமாத்தூர் உள்ளிட்ட 57 ஊராட்சிகளில் பணி செய்யும் 380 தூய்மை பணியாளர்களுக்கு நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருள் செல்வன், எம்எம் சித்திக் மற்றும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலையில் செம்பனார்கோயில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் நிவாரண நிதி மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். உத்திரங்குடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் லெனின் மேஷாக், துணைத்தலைவர் நவீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.