தரங்கம்பாடி நவ.18- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழையூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு திருக்கடையூர் எம்.கே. கணேஷ் குருக்கள் தனது சொந்த செலவில் இதய நோய் கண்டறியும் கருவியை(இசிஜி) குடும்பத்தினர் சார்பாக வழங்கியுள்ளார். 20 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் 70 ஆயிரம் மதிப்பிலான அக்கருவியை அவரது சகோதரர் மகேஷ் குருக்கள் திங்களன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரசேகர், மருத்துவர் சத்ய பிரியா, சுகாதார ஆய்வாளர் பழனி தாஸ், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் மார்க்ஸ், லயன்ஸ் சங்க செயலாளர் கார்த்திக், தலைமையாசிரியர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.