tamilnadu

மணலகரமில் தரமற்ற கட்டுமானப் பணி  இடியும் நிலையில் ஈமக்கிரியை மண்டபம் 

சீர்காழி, ஜூன் 6-கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்தில் கட்டப்பட்டுமூன்றே வருடத்தில் சிதலமடைந்த ஈமக்கிரியை மண்டபத்தைசரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியைச் சேர்ந்த மணலகரம் கிராமத்தில் ஈமக்கிரியை மண்டபம்கட்டப்பட்டு மூன்று வருடங்கள் ஆன நிலையில் சிதலமடைந்துஇடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மண்டபத்தின் தரைதளம் முறையாக போடப்படாததால் சிதிலமடைந்து கீழே உள்ள மண் தெரிகிறது. இக்கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் மிக விரைவில் சிதலமடைந்து பயனற்று கிடக்கிறது. இப்பகுதியில் நடைபெறும் ஈமக்கிரியை நிகழ்ச்சிகள், இந்த கட்டிடம் மோசமாக உள்ளதால் இக்கட் டிடத்தில் நடத்துவதை இவ்வூர் மக்கள் நிறுத்தியுள்ளனர். இதற்கு தரமற்ற கட்டுமானப் பணியே காரணம் என்று இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். எனவே தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள ஈமக்கிரியை மண்டபத்தை உடனடியாக இடித்து அகற்றி விட்டு புதிதாக ஈமக்கிரியை மண்டபம் கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;